Saturday, July 30, 2011

இசை என்றால் என்னைபொருத்தவரை இளையராஜா தான்!! -இயக்குனர் பி.வாசு

பி.வாசு இயக்கத்தில் ஆர்.கே நாயகனாக நடிக்கும் புலிவேஷம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணா ஆடிடோரியத்தில் நடைபெற்றது.ரசிகர்கள் முன்னலையில் கலைநிகழ்ச்சிகளோடு கோலகலமாக நடைபெற்ற இந்த விழாவில் இயக்குனர் பி.வாசு பாடல் சிடியை வெளியிட புகழ்பெற்ற சர்வதேச ஸ்குவாஷ் விராங்கனை ஜோஸ்னா சின்னப்பா பெற்று கொண்டார்.

இசையமைப்பாளர் , ஸ்ரீ காந்த் தேவா,நாயகி சதா,மற்றொரு நாயகி திவ்யா பத்மினி,இயக்குனர் வாசுவின் மகன் இளம் நடிகர் ஷ‌க்தி,நடிகர் எம் எஸ் பாஸ்கர்,தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்
                .

விழாவில் இயக்குனர் பி.வாசு  கூறியதாவது;
ஒரு படத்திற்கு வியாபாரமும் முகவும் அவசியம் .நாயகன் ஆர்.கே மிகவும் புத்திசாலித்தனமாக இந்த இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்.

வேலை கிடைச்சிடுச்சி படத்திற்கு பிறகு மிகவும் வித்தியாசமான திரைக்கதையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.நாயகன் ஆர்.கே கதைக்கேற்றெ வகையில் பொருத்தமாக நடித்திருக்கிறார்.கார்த்திக் மிகவும் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.நான் அறிமுகம் செய்த‌ மன்சூர் அலிகான் நீண்ட இடைவெளிக்கி பிறகு என படத்தில் நடித்துள்ளார்.

இசை என்றால் என்னைபொருத்தவரை இளையராஜா தான்.அந்த படத்தில்  ஸ்ரீ காந்த் தேவா இளையாராஜாவுக்கு நிகராக ஒரு மெலடி பாட்டு போட்டிருக்கிறார்.சின்னதம்பி போவோமா ஊர்கோலம் போல இந்த பாட்டு ஹிட்டாகும்.என மற்ற படங்க‌ளை போலவே எல்லா வகையான பாடல்களும் இதில் இருக்கிற‌து.

இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, July 28, 2011

சமஸ்கிருதம் கலக்காத பெயர்களுக்கு தான் வரி விலக்கு-தங்கர் பச்சான் கோரிக்கை

 யக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சினிமா என்னும் திரைப்படக்கலையின் மூலம் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும், நமக்கான மரபுகலைகளையும், பழங்கலைகளையும், நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வையும் அது அழித்திருக்கிறது. இன்று மக்களின் கலையாகவும், அவர்களின் வாழ்வையும் பிரதிபலிக்கிற கலையாகவும் மாறிவிட்ட திரைப்படக்கலையை மிகவும் பொறுப்புடனும், கவனமாகவும் கையாள வேண்டிய கடமை அதனை சார்ந்த உருவாக்குபவர்களுக்கு இருக்கிறது. நம் மொழியையோ, பண்பாட்டையோ, நம் மதிப்பீடுகளையோ பற்றி கவலைப்படாமல் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக மக்கள் விரும்புகிறார்கள் எனச்சொல்லி திரைப்படத்தை உருவாக்குபவர்களும் சமூகத்தின் முன் குற்றவாளிகள் தான்.

தமிழ் படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தான் முந்தைய தமிழக அரசு தமிழில் பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை அளித்தது. ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டோமா என்பது திரைத்துறையில் உள்ளவர்களுக்கு புரியும்.
இதே வரிவிலக்கு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் நிபந்தனைகள் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
தமிழில் பெயரை சூட்டி விட்டு மொழி, பண்பாட்டு, கலாசார கூறுகளை எவ்வளவு வேண்டுமானாலும் சிதைக்கலாம், யதார்த்தம் என்கிற பெயரில் ஆபாசம், வன்முறைக்காட்சிகளை கூசாமல் காட்டி வருங்கால தலைமுறைகளையும் சீரழிக்கலாம் என்கிற போக்குக்கு கடிவாளம் போடப்பட்டிருக்கிறது. தேவையில்லாமல் அயல் மொழிகளை புகுத்துபவர்களுக்கும், வன்முறை, ஆபாச காட்சிகளை உருவாக்கி பொழுதுபோக்கு என்கிற பெயரில் உருவாகிற திரைப்படங்களுக்கும் வரி விதிக்கப்படும், தமிழ்பண்பாடு, கலாசாரம், மொழியை போற்றுகின்ற படைப்புகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்கிற இத்தகைய அறிவிப்பு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத புரட்சிகரமான அறிவிப்பாகும். இது பொறுப்புள்ள கலைஞர்களும், தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
மொழி, பண்பாடு அடையாளங்களை காப்பதற்கு மேற்கொண்டுள்ள தமிழக அரசு இவை முழுமையாக நிறைவேற வேறொரு நிபந்தனையையும் விதிக்க வேண்டும். ஆங்கிலத்தில் பெயரிட்டாலும், சமஸ்கிருதத்தில் பெயரிட்டாலும் இரண்டுமே வேற்று மொழி தான். கடந்த காலங்களில் வரி
விலக்கினைப் பெற்று பலனை அனுபவித்து வெளியான படங்களில் சமஸ்கிருதம் சொற்களை கலந்து வந்தவை ஏராளம். தூய தமிழ் சொற்களுடன் சமஸ்கிருதம் கலக்காத பெயர்களை சூட்டுபவர்களுக்கு தான் வரி விலக்கு என்பதை உடனே அறிவிக்க வேண்டும். இதனை தான் தமிழ் அறிஞர்களும், தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
வரிவிலக்கு தொடர்பான நிபந்தனைகளை செயல்படுத்தும் குழுவில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இடம் பெறுவார்கள் என நம்புகிறோம்.
இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு கலைஞன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும், எனது அளவற்ற மகிழ்ச்சியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

இயக்குனர்களுக்கு லயோலாவின் கெளரவ பட்டம்

யோலா கல்லூரி முதுகலை ஊடகக்கலைகள் துறை சார்பில் "தேடல்" ஊடகப்பேரவை
தொடக்கவிழா 27.07.2011 அன்று நடைபெற்றது.

மாண்புமிகு திரு. ஜி.செந்தமிழன் அமைச்சர் (சட்டத்துறை, செய்தி மற்றும்
விளம்பரத்துறை) , இயக்குனர் பிரபு சாலமன், இயக்குனர் சீனு ராமசாமி
ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் "பண்பாட்டு இயக்குனர்" பட்டம் திரு. பிரபு சாலமனுக்கும் ,
"மக்கள் இயக்குனர்" பட்டம் திரு. சீனு ராமசாமிக்கும் வழங்கப்பட்டது.

    

நடிகருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள 'காஞ்சனா' தமிழில் கடந்த 22 ம் தேதி வெளியாகி வசூலை குவித்து வருகிறது.இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவில்  கடந்த 14 ம் தேதியே வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.மிகவும் சந்தோசமடைந்த தெலுங்கு படத்தின் தயாரிப்பாளர் பெல்லகுண்டா சுரேஷ் , ராகவா லாரன்ஸ்க்கு சமீபத்தில் பி எம் டபிள்யு கார் பரிசளித்துள்ளார்.

Sunday, July 24, 2011

யார் இந்த இனியா ?

'களவாணி' படத்தையடுத்து சற்குணம் இய்க்கும் 'வாகை சூட வா'படத்தில் விமல் ஜோடியாக நடிக்கிறார் இனியா.இவர் ஏற்கனவே சுருதி என்ற பெயரில் 'பாடகசாலை' படத்தில் நாயகியாக நடித்தவர்.இதை அவர்
யாரிடமும் சொல்வதில்லை.முதல் படம் 'வாகை சூட வா' என்றே சொல்லி வருகிறார்.
                                  வாகைசூடவா படத்தில்..
                                               பாடகசாலை படத்தில்...
                                                                 பாடகசாலை 

அஜித்-விஜய் சந்திப்பு படங்கள்




இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத் ஸ்ரீகாந்த் திருமண நிச்சயதார்த்த விழாவில் அஜித்குமார்,விஜய்,சங்கீதா விஜய்,அனிருத் ஸ்ரீகாந்த்...

ஷம்முவின் மரம் ஏறும் ஆசையை நிறைவேற்றிய டைரக்டர் !


 'பாலை' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் நடந்தது.
தயாரிப்பாளர் நாகை ரவி, இயக்குனர் ம.செந்தமிழன் ஆகியோர் வரவேற்றார்கள்.
படத்தின் நாயகி ஷம்மு இந்த விழாவில் பேசியதாவது-
"பொதுவா ஒரு கதையை கேட்டவுடனே இந்த படத்தை ஏன் பண்ணக் கூடாது, ஏன் பண்ணணும் என்று இரண்டு கேள்விகள் எனக்குள் கேட்டுக் கொள்வேன். இந்த கதையை கேட்டதும் எனக்கு தோன்றியது உடனே‌ நடி‌க்‌கணும்‌ என்றுதான். 
களறி சண்டை போட வேண்டும், மரத்தில் ஏற வேண்டும் என்று சில இக்கட்டான விஷயங்களை டைரக்டர் செந்தமிழன் சொன்னாலும், எனக்கு அதெல்லாம் ரொம்ப ஜாலியாக பட்டது. அமெரிக்காவில் சாலையோரத்தில் மரங்களை பார்த்தால் அதில் ஏற வேண்டும் என்று பலமுறை நினைப்பேன். ஆனால் அதற்கெல்லாம் சாத்தியமே இல்லை. இந்த படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியது. நான் ஆம்பிளையாக பிறந்திருந்து நடிக்க வந்திருந்தா ஆக்ஷன் ஹீரோ ஆகியிருப்பேன். அந்தளவுக்கு எனக்கு ஆக்ஷன் மேல் ஆசை உண்டு. இந்த படம் எனக்குள் இருக்கும் அந்த ஆசையை நிறைவேற்றியிருக்கு. 

வில் அம்புடன் ஒரு பைட் பண்ணியிருக்கேன், கையில் தீப்பந்தம் பிடிச்சு ஓடியிருக்கேன். ஆக்ஷன் சைட்ல இப்படின்னா, அழகான காதலும் இருக்கு எனக்கு. யாரை பார்த்தாலும் இலை தழை ஆடை விஷயத்தைதான் கேட்கிறார்கள் என்னிடம். நீங்கள் ஸ்டில்களில் பார்த்தது போல இலையும் தழையும் அணிய முடியுமா என்ன? அது அந்த வடிவத்தில் செய்யப்பட்ட துணியால் ஆன ஆடைதான். இந்த படத்தில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், படக்குழுவினர் செய்து கொடுத்த ஆபரணங்கள்தான். இந்த கதை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் நடப்பது. அதனால் ஆபரணங்களுக்கு பதிலாக அவர்கள் மலர்களைதான் அணிந்தார்கள். அதிலேயே எனக்கு தோடு, மூக்குத்தி எல்லாம் செய்து கொடுத்திருந்தார்கள். " என்றார்.




Wednesday, July 20, 2011

யார் நினைச்சாலும் திருட்டு விசிடி யை ஒழிக்கவே முடியாது ! -டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்

'திருட்டு விசிடி யை ஒழிக்கவே முடியாது 'என்று 'ரௌத்திரம்' இசை வெளியீட்டு விழாவில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா-ஸ்ரேயா நடிக்கும்' ரௌத்திரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா  வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்றது.விழாவில் ஆர்.பி.சௌத்ரி,இயக்குனர்கள் எஸ்.ஏ .சந்திரசேகரன்,கே.எஸ்.ரவிக்குமார்,லிங்குசாமி,எஸ்.பி.ஜனநாதன் , விக்ரமன்,ராஜேஷ்,சாய் ரமணி,வெற்றிமாறன்,கோகுல் ,நடிகர்கள் ஆர்யா,ஜெயம் ரவி,ஜீவா,நடிகை ஸ்ரேயா உள்பட பலர் கலந்துகொண்டனர்.பாடல் குறுந்தகடை இயக்குனர்கள் சேர்ந்து வெளியிட நடிகர்கள் சேர்ந்து பெற்றுக்கொண்டனர்..விழாவில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியாதாவது: "ஜீவா நடிச்ச 'கோ' படத்தை ரெண்டு தடவை பார்த்தேன்.ஒரு தடவை தான் தியேட்டர்ல பார்த்தேன்.இன்னொரு தடவை சிடி யில்  தான் பார்த்தேன்.நான் முன்பே சொன்னது தான் ,படம் ரீலிஸ் பண்ணும்போதே படத்தோட ஒரிஜினல் சிடியை வெளியிட்டு விடலாம் அது ஒரு பக்கம் காசு வந்துகொண்டிருக்கும்.இதை ஏன் சொல்றேன்னா திருட்டு சிடி ஈ ,கொசு,ஈசல் மாதிரி தான். யார் நினைச்சாலும் திருட்டு விசிடி யை ஒழிக்கவே முடியாது. இதற்கு எஸ் .ஏ சந்திரசேகரன்  [தயாரிப்பாளர் சங்க தலைவர் ]முயற்சி எடுக்கவேண்டும்" என்றார். அடுத்து பேச வந்த எஸ் .ஏ சந்திரசேகரன்  இதை பற்றி  எதுவும் பேசவில்லை ."விஜய்யின் வளர்ச்சியால் தனக்கு பெருமை ஜீவாவின் வளர்ச்சியால் சௌத்ரிக்கு  பெருமை " என பெருமைகளை சொல்லி வாழ்த்திவிட்டு போனார்.

Sunday, July 3, 2011

விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் -'வாக்குமூலம்

க்கள்   பிரச்சனையை  சொல்லக்கூடிய,மக்களுக்கான சினிமாவாக மட்டுமேஉருவாகிவருவது குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்கள்
தான் என்று சொல்லலாம். 
"வாழ்க்கைக்குத் தேவையான-வாழ்க்கையை செம்மைப்படுத்துகிற முயற்சி தான் இந்த குறும்படங்கள்' என்கிறார் குறும்பட இயககுநர் க..சுப்பு.
இவர் இயக்கியிருக்கும்  குறும்படம் 'வாக்குமூலம்'.வேலிகாத்தான் என்று சொல்லக்கூடிய காட்டுக் கரவேல மரங்களின் வளர்ச்சியையும் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய ஆபத்தினையும்,மரபணு மாற்று விதைகள் மூலம் ஏற்படும் தீமைகளையும் கதாபாத்திரங்கள் மூலம் 'வாக்குமூலம்' கொடுக்கிறது இந்த குறும்படம்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த குறும்படத்தை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி? இயக்குனர்  க.சுப்புவிடம் கேட்டோம்.
"பெரிய இயக்குநர்களின் உதவியாளர் என்கிற முகவரி இருந்தால் உடனே படம் இயக்க வாய்ப்பு கிடைக்கிறது.அந்த ஒரே காரணத்திற்காகவாய்ப்புகொடுக்கப்பட்டுதோல்வியடைந்தபடங்கள்
நிறையஇருக்கின்றன.குறும்படங்கள்,திரைப்படம்இயக்குவதற்கான
சரியான முகவரியாக இருக்கும்என்றுநினைத்தேன்.இதன்மூலம் 
அவனுடையஆளுமை,சிந்தனைஇதெல்லாம் வெளிப்படுகிறது.
இதுநமக்குகிடைத்த ஒரு வரப்பிரசாதம்னு சொல்லுவேன்.
என் சொந்த ஊரான கும்பகோணத்தில் படிச்சிட்டு இருக்கும்போது ஒரு பொதுக்கூட்டத்தைப்பார்க்கிறேன்.நாம் விரும்புகிறோமோ,இல்லையோ 
பொதுவுடைமை தத்துவங்கள் நம்ம காதுகளில் விழும்.அப்படித்தான் அந்த மேடைப் பேச்சைக் கேட்க நேர்ந்தது.
வறட்சி பிரதேசத்திற்கான அடிப்படை காரணம்  நம்ம பஞ்சக் காலத்தில் ஒரு வல்லரசுகொடுத்த காட்டு கருவேலமரங்கள்தான்.காரணம்,அதை 
அழிக்கணும்னுபேசறாங்க.அது ஒருசெய்தியாக என்மனதில் பதிஞ்சு
 போனது.சென்னை வந்து சினிமாவில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தபோது அந்தசெய்திக்கான ஆதாரங்களை சேகரிக்கும்போது ரசாயனஉயிர்க்கொல்லிகள்,செயற்கை வண்டுகள்,ஆகாயத் தாமரைச் 
செடிகள்,கருவேல மரங்கள்,மரபணு மாற்றுவிதைகள்,இடத்தை கபளீகரம் பண்றது 
என கிட்டத்தட்ட 50  காரணங்களை தேர்ந்தெடுத்தேன். 
 நமக்குஇப்ப என்ன தேவை அப்படின்னு பார்க்கும்போது கருவேல மரங்களின்வளர்ச்சியில் காற்று உஷ்ணமாகி பூமி வெப்பமடைவது,
மரபணுமாற்றுவிதைகளினால் மனிதர்களும் ,விலங்குகளும்
 மலட்டுத்தன்மை அடைவது, உலக பொருளாதார மயமாக்களில் 
இடத்தைகபளீகரம்பண்றதுஎனமூன்று விசயங்கள் முதன்மையாக -
முக்கியமாய் தெரிந்தது.
இதை குறும்படமாகஎடுக்க முயற்சித்தபோது என்சமுதாய அக்கறையை
 புரிந்துகொண்டு நண்பர் மெடிக்கல் சத்யா தயாரிப்பதற்கு முன் வந்தார்.
அவர்கொடுத்தஊக்கமும் ,முதலீட்டுத் தொகையும் 'வாக்குமூலம்' உருவாக காரணமாக அமைந்தது."என்கிறார்.
க.சுப்பு திரைப்படம் இயக்கும்   முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
"வணிக ரீதியிலான படங்கள் செய்தாலும் என் கோப தாபங்கள் சமுதாயத்தைச் சார்ந்து இருக்கும்.காதல் படங்களிலும்  சமுதாய சிந்தனை இருக்கும்" என்கிறார்.
சமுதாய  சிந்தனையுள்ள படைப்பாளியை மக்கள் எப்போதும்  உற்சாமாக வரவேற்பார்கள்.