Saturday, October 22, 2011

தமிழைக் கடித்துத் துப்பும் பாடகருக்கு ஹீரோக்கள் ஆதரவு.!

தமிழில் ஹிட்டான பெரும்பாலான பாடல்களை பாடியிருப்பவர் ஸ்ரேயா கோஷல். லேட்டஸாக இவர் பாடி ஹிட்டான பாடல் 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தில் இடம் பெற்ற 'மன்னிப்பாயா..அதேபோல தமிழில்  ஹிட்டான பல பாடல்களை பாடியவர் உதித் நாராயாணன்.இந்த இருவரும் வடநாட்டை சேர்ந்தவர்கள்.
ஸ்ரேயாகோஷலின் குரல் மட்டுமல்ல,அவர் உச்சரிக்கும் குரலும் அழகு தான்.ஒரு தமிழ் பெண் பாடியது போலவே அவ்வளவு அழகாக தமிழை உச்சரித்துபாடுகிறார்.ஆனால் இந்த உதித் நாராயணன் தமிழைக் கடித்து துப்பி தான் பாடுவார்.தமிழ்ப் பாடலை அவரை பாட வைத்து தமிழ்க் கொலை செய்த பெருமை அவருக்கு மட்டுமல்ல, நம் இயக்குநர்களுக்கும், ஹீரோக்களுக்கும் உண்டு.இதில் குறிப்பாக ஹீரோக்கள் தான் அவரை சிபாரிசு செய்கிறார்கள் என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.இந்த நிலை வேறு எந்த மொழி சினிமாவிலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.  

        

Wednesday, October 19, 2011

ஊர் பெயரில் உருவாகி வரும் படங்கள்

'திருத்தணி' ,
'தேனிமாவட்டம்' ,
'விருதுநகர் சந்திப்பு', 
'நெல்லை சந்திப்பு',
'நெல்லை பட்டணம்',
'பாளையங்கோட்டை', 
'வேலூர் மாவட்டம்',
'கோயம்பேடு பேரூந்து நிலையம்',
'திருமங்கலம் பேரூந்து நிலையம்',
'கமுதியில் ஒரு காதல்',
'வருசநாடு',
'தலக்கோணம்', 
'பழைய வண்ணாரப்பேட்டை'

பார்த்து ரசியுங்கள்..கமெண்ட் உங்களது...


Thursday, October 13, 2011

நன்றி மறந்த நடிகை..சாடிய இயக்குனர்.!

மீபத்தில் நடந்த 'வித்தகன்' ஆடியோ பங்க்ஷனுக்கு வந்திருந்த நடிகைகளில் தன்ஷிகாவும் ஒருவர். தன்ஷிகானா யாருன்னு கேட்க தோணுதா? ஆனா அம்மணியோ தன்னை உலகம் அறிஞ்ச சூப்பர் நடிகைன்னு நினைச்சிகிட்டு இருக்கு போல..பங்க்ஷன்ல அவரை பேச கூப்பிட்டதும் மைக் முன்னாடி வந்ததவர் ,எப்படி இருக்கீங்க.....? என்று ஆடியன்ச பார்த்து கேட்க எந்த ரியாக்ஷனும் இல்லை. மூக்குடைந்தது தான் மிச்சம்.பின் சமாளித்துக் கொண்டு பேசினார்.'அரவான் 'பட டைரக்டர் வசந்தபாலனுக்கு நன்றி கூறினார்.எங்கு வந்து எதை பேசுவது என்று தெரியாத  மக்குவாக நடந்து கொண்டார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கரு .பழனியப்பன் ,"தன்ஷிகாவை 'பேராண்மை' யில் அறிமுகப்படுத்தியவர் ஜனநாதன் சார்.அவர மறந்துட்டாங்க.அவருக்குதான் மொதல்ல நன்றி சொல்லணும்.ஆனா 'அரவான்' ல நடிச்சிட்டு வர்றதால வசந்தபாலனுக்கு நன்றி சொல்றாங்க. இப்படி நன்றி மறக்கிறதால தான் டைரக்டர்களெல்லாம் நடிகன் ஆகிடுறாங்க." என்றார். தன்ஷிகாவுக்கு இதை கேட்டதும் முகம் இறுகிப் போனது. பின் எழுந்து போய் டைரக்டர் ஜனநாதனுக்கு கை கொடுத்து ஸாரி கேட்டார்.
கரு .பழனியப்பன் அண்ணே ,,உண்மையிலேயே தன்ஷிகா முதல்ல அறிமுகப்படுத்திய டைரக்டருக்கு நன்றி சொல்லியிருக்கணும் என்றால்..அவர் 'மறந்தேன் மெய் மறந்தேன்' பட டைரக்டருக்கு தான் நன்றி சொல்லணும்.ஆம்,அதுதான் அவர் கதாநாயகியாக நடித்த முதல் படம்.மற்றொரு நாயகியாக நடித்தவர் கல்யாணி [பூர்ணிதா} இந்த படத்தில் தன்ஷிகா மனநலம் சரியில்லாதவராக நடித்திருந்தார்.அதனால மறந்துவிட்டாரோ என்னவோ..
 தன்ஷிகாவைப் பற்றி மற்றொரு தகவல் ...அவரது முந்தைய பெயர் மரினா.அந்த பெயரில் துக்கடா கேரக்டரில் சில படங்களில் நடித்துள்ளார்.

Friday, October 7, 2011

வில்லன் ஆனார் லியாகத் அலிகான்

'பூந்தோட்ட காவல்காரன்' ,'புலன் விசாரணை','கேப்டன் பிரபாகரன்',உட்பட 35 படங்களுக்கு வசனம்,திரைக்கதை வசனம் எழுதியதுடன் 'ஏழைஜாதி', 'பாட்டுக்கொரு தலைவன்','எங்கமுதலாளி' உட்பட 5 படங்களை இயக்கியும் இருப்பவர் லியாகத் அலிகான் .இவர் தற்போது 'ஊராட்சி ஒன்றியம்' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தில்  ஸ்ரீதர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தேனிமாவட்டத்தை சேர்ந்த தமிழ்ப் பெண் தமலி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இவர்களுடன் ஆர்.சுந்தராஜன்,கஞ்சா கருப்பு,'நான் கடவுள்' ராஜேந்திரன்,சாதனா,லாவண்யா,திண்
டுக்கல் ஜெயபால்,செல்லத்துரை மற்றும் பலர் நடிக்கின்றனர்.கலெக்டர் கேரக்டரில் முன்னணி நடிகை ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார்.
எஸ்.சுரேஷ் DFT ஒளிப்பதிவு செய்கிறார்.எஸ்.ஆர்.பிரசாத் இசையமைக்கிறார்.பாடல்களை கலைக்குமார் எழுதுகிறார்.படத்தொகுப்பை சுரேஷ்.எம்.கோட்டீஸ்வரன் கவனிக்கிறார்.கலை-மோகன் ராஜேந்திரன் ,நடனம்-சாகுல்,சுபாஷ்.'ராஹிட் ஸ்டூடியோஸ்' பட நிறுவனம் சார்பில் கோவை.பி.தண்டபாணி ,எஸ்.பி.ராஜா இணைந்து தயாரிக்கின்றனர்.
கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் கே.எம்.கிருஷ்ணமூர்த்தி.
படத்தைப் பற்றி இயக்குனர் கே.எம்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது; "இந்தியாவின் உயிர்நாடி எங்கே இருக்கிறது என்ற போது அது கிராமங்களில் இருக்கிறது 'என்று பதிலளித்தார் காந்தி.'கிராமங்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சி கிராமங்களை வைத்தே மதிப்பிடமுடியும்' என்று காந்தி கடைசிவரை வலியுறுத்தி வந்தார்.
நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் கிராமங்கள் சரியாக இருந்தால் தான் நாடு தலை நிமிர்ந்து நிற்க முடியும்.ஆனால் இன்றைய நிலை என்ன..? கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.கிராம மக்களிடம் விழிப்புணர்ச்சி இல்லை.
அரசு போடும் திட்டங்கள் கடைக்கோடியில் இருக்கும் கிராமங்களை சென்றடைய வேண்டும். அதற்கு அந்த ஊராட்சி சரியாக செயல்பட வேண்டும்.
ஊராட்சி மன்றத்துக்கும் ஊராட்சி ஒன்றியத்துக்கும் உள்ள வேறுபாடு கூட நம்மில் பலருக்கு தெரிவதில்லை.இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார்கள்.ஆனால் அதை செயல்படுத்த நினைப்பதில்லை.
இந்த கருத்தை செய்தியாக சொல்லாமல் புதுக்கோட்டையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் ஜனரஞ்சகமான கதையோடு சொல்லியிருக்கிறேன். கிராமத்து மக்களின் விழிப்புணர்ச்சியை  வலியுறுத்துகிற இக்கதையில் ஒரு சாதாரண கிராமத்து இளைஞன், ஊராட்சி நிலையில் உள்ள சிற்றுரை ஊராட்சி ஒன்றிய நிலைக்கு எப்படி மாற்றி உயர்த்துகிறான் என்பதை காதல், சென்டிமெண்ட்,நகைச்சுவை என சுவாரஸ்யம் கலந்து உருவாக்கியிருக்கிறேன் .
சென்னை,திண்டுக்கல்,கொடைக்கானல்
,புதுக்கோட்டை ஆகிய இடங்களில் 90 சதவீத படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது." என்றார்.

கிணற்றில் விழுந்த நடிகர் காப்பாற்றிய ஊர்மக்கள்

சீமான் கதையின் நாயகனாகவும், முரளி, ஐஸ்வர்யா தேவன் என்ற கேரளா புதுவரவும் நடிக்கும் படம் "கண்டுபிடி கண்டுபிடி". மூவி பஜார் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
 
போலீஸ் விசாரணையை மையப்படுத்தி நகரும் பரபரப்பான படமாக வளர்ந்து வரும் இப்படத்தின்  படப்பிடிப்பு தேனி மாவட்டம் கம்பம் அருகில் நடந்தது.  'குங்குமப்பூவும் கொஞ்சுபுறா'வும் படத்தின் இணை நாயகனாக நடித்த தருண் சத்ரியா இப்படத்தில் முக்கிய வேடமேற்று நடிக்கிறார். 

காட்சிப்படி தருண் நூறு அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி படிக்கட்டில் உக்கார்ந்திருப்பதுபோல ஒரு காட்சியை படமாக்கத் திட்டமிட்டார்கள். இதற்காக பல்வேறு பகுதிகளில் ஆழமான கிணறுகளை தேடி இறுதியாக கொஞ்சம் பழமையான கிணறொன்றை கண்டுபிடித்து படப்பிடிப்பை நடத்தினார்கள். 

நடிகர் தருண் சத்ரியா படிக்கட்டு வழியாக இறங்கியபோது அங்கிருந்த பாசி வழுக்கி பிடிமானம் இல்லாமல் கிணற்றோரமாகவே தவறி விழுந்தார். தலையில் அடிபட்டவர் மயக்க நிலைக்கு செல்ல, அந்த ஊரைச் சேர்ந்த ரெண்டு பேர் உடனடியாக கிணற்றுக்குள் குதித்து அவரை மீட்டு கரை சேர்த்தனர். 

அருகிலிருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர் படக்குழுவினர். இயல்புக்கு திரும்பிய தருண் மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி நடித்துமுடித்தபோது ஒட்டுமொத்த படக்குழுவே அவருக்கு கைத்தட்டி உற்சாகமளித்தது..