Saturday, October 22, 2011

தமிழைக் கடித்துத் துப்பும் பாடகருக்கு ஹீரோக்கள் ஆதரவு.!

தமிழில் ஹிட்டான பெரும்பாலான பாடல்களை பாடியிருப்பவர் ஸ்ரேயா கோஷல். லேட்டஸாக இவர் பாடி ஹிட்டான பாடல் 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தில் இடம் பெற்ற 'மன்னிப்பாயா..அதேபோல தமிழில்  ஹிட்டான பல பாடல்களை பாடியவர் உதித் நாராயாணன்.இந்த இருவரும் வடநாட்டை சேர்ந்தவர்கள்.
ஸ்ரேயாகோஷலின் குரல் மட்டுமல்ல,அவர் உச்சரிக்கும் குரலும் அழகு தான்.ஒரு தமிழ் பெண் பாடியது போலவே அவ்வளவு அழகாக தமிழை உச்சரித்துபாடுகிறார்.ஆனால் இந்த உதித் நாராயணன் தமிழைக் கடித்து துப்பி தான் பாடுவார்.தமிழ்ப் பாடலை அவரை பாட வைத்து தமிழ்க் கொலை செய்த பெருமை அவருக்கு மட்டுமல்ல, நம் இயக்குநர்களுக்கும், ஹீரோக்களுக்கும் உண்டு.இதில் குறிப்பாக ஹீரோக்கள் தான் அவரை சிபாரிசு செய்கிறார்கள் என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.இந்த நிலை வேறு எந்த மொழி சினிமாவிலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.  

        

No comments:

Post a Comment