Thursday, June 23, 2011

எப்படி இருக்கு அவன்-இவன் ?


விஷால், ஆர்யா, ஆர்.கே., ஜி.எம். குமார், ஜனனி ஐயர், மது ஷாலினி, அம்பிகா, மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு -ஆர்தர் ஏ. வில்சன், இசை -யுவன் சங்கர் ராஜா, இயக்கம் -பாலா, தயாரிப்பு- ஏ.ஜி.எஸ். என்டெர்டெய்ன்மென்ட்.
       

தன்னைத்தானே 'ஹைனஸ் ' என்று சொல்லிக்கொள்ளும்  ஜமீன்தார் ஜி.எம். குமார் திருமணமாகாத வயதானவர். அதே ஊரில் திருட்டுத் தொழில் செய்யும் விஷாலும் ஆர்யாவும் ஒரு தந்தை-இரு தாய்களுக்கு பிறந்த அண்ணன்-தம்பி.

ஜி.எம். குமார் இறைச்சிக்காக மாடுகளை கடத்தும் ஆர்.கே.வை மிருக வதைத் தடுப்பு அதிகாரிகளிடம் பிடித்துக் கொடுக்க கைதாகிறார் ஆர்.கே.. விடுதலையாகி வரும் ஆர்.கே., ஜி.எம். குமாரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து கொலை செய்து மரத்தில் தொங்க விடுகிறார். இதைக் கண்டு கொதித்தெழும் விஷாலும், ஆர்யாவும், ஆர்.கே.வை பழி வாங்குவது கிளைமாக்ஸ்.

பெண் தன்மை நிறைந்தவராக, மாறு கண் தோற்றத்துடன் நடித்திருக்கும் விஷால் ஆரம்ப காட்சியில் போடும் ஆட்டம் அமர்க்களம். நடிகர் சூர்யா முன்பு மேடையில் அவர் நவரசம் காட்டி நடிக்கும்போது படத்தில் வரும் கதாபாத்திரங்களை மட்டுமல்ல நம்மையும் கலங்க வைப்பதோடு ஆச்சர்யபடுத்துகிறார். விஷாலின் சினிமா கேரியரில் இது மறக்க முடியாத படம் என்று சொல்லலாம். நிச்சயம் அவரது நடிப்புக்கு விருது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வித்தியாசமான கெட்-அப் களில் நகைச்சுவை நடிப்பில் கலக்கியிருக்கிறார் ஆர்யா. கதையை நகர்த்திச் செல்லும் கதாபாத்திரத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் கவனிக்க வைக்கிறார் ஆர்.கே..

ஆர்யா காதலிக்கும் பெண் தன் எதிரியின் மகள் என்று தெரிந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜி.எம். குமாரின் மனதை நோகடிக்கும்படியாக ஆர்யா பேசி விட்டு போக, ஜி.எம். குமார் கண்ணாடி முன்னால் நின்று தன்னைத்தானே நொந்து திட்டித் தீர்ப்பதும், புறாக்களிடம் மனம் விட்டு பேசுவதும், பின் மழையில் நனைந்து கொண்டே ஆர்யாவின் வீட்டுக்குத் தேடிப் போய் பேசுவதும் ஜி.எம். குமாரின் நடிப்பில் முத்திரைப் பதிக்கும் காட்சிகள்.

கிளைமாக்ஸில் அவரை நிர்வாணமாக்கி ஆர்.கே. பண்ணும் அட்டூழியத்தால் ஆர்.கே. மீது வரவேண்டிய வெறுப்பு, மாறாக 'ஏன் இப்படி இந்த கதாபாத்திரத்தை அவஸ்தை படுத்துகிறார்?' என இயக்குநர் பாலா மீதே ஏற்படுகிறது.

படத்தில் பெரும்பாலான கேரக்டர்கள் கேனையன்களாகவும் கேனச்சிகளாகவுமே வெளிப்பட்டிருக்கிறது. பல காட்சிகள் 'இது பாலா படம் தானா?' என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகள் மாங்கா மடச்சிகளாகவே சித்தரிக்கப் படுவார்கள். பாலாவும் அதைத் தான் செய்திருக்கிறார். படிப்பறிவு இல்லாத திருட்டுத் தொழில் செய்யும் விஷால், ஆர்யாவை கான்ஸ்டபிள்  ஜனனியும், படிக்கும் மதுஷாலினியும் சொக்கிப் போய் காதலிப்பது வேடிக்கை.
நறுமணம் வீசும் வசன‌ங்கள் மட்டுமல்ல நாத்தம் புடிச்ச வசனங்களும் தனக்கு நல்லாவே வரும் என நிருபித்திருக்கிறார் வசனகர்த்தா ராமகிருஷ்ணன். 'பெண்கள் அணியும் பேண்ட்டில் ஜிப் எதற்கு?' என்ற கிளுகிளு ஆராய்ச்சி கேள்வியை வைக்கும் அவர் , இறைச்சிக்காக மாடு கடத்தும் ஆர்.கே. மூலம் 'வெளிமாநிலத்தில் இருந்து ஒட்டகத்தை இங்கே கொண்டுவந்து குர்பானி கொடுக்கறதை போய் கேட்க வேண்டியது தானே?' என மிருகவதை தடுப்பு அதிகாரிகளுக்கு வசனத்தால் சூடு வைக்கிறார்.

திருடர்கள் அனைவரையும் அழைத்து கறி, தண்ணி விருந்து வைத்து 'இனி திருடமாட்டோம்' என சத்தியம் வாங்குகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர். இக்காட்சி ரசிக்க வைத்தாலும் எந்த காலக் கட்டத்தில் இது நடக்கிறது? என்ற சந்தேகக் கேள்வியையும் வைக்கிறது.

பீடி குடிக்கும் அம்பிகா, மகனோடு குத்தாட்டம் போடும் பிரபாரமேஷ், மாவாட்டும் கணவனாக 'சூப்பர் சிங்கர்ஸ் ' புகழ் அனந்த்தராமன், நெற்றியில் பட்டையுடன் வரும் இன்ஸ்பெக்டர் என வித்தியாசமான கதாபத்திரங்களில் வருபவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

யுவனின் இசையில் 'ஏ...டிரியா டிரியா டோய்...' என்ற பாடலைத் தவிர வேறு எதுவும் பெரிதாய் எடுபடவில்லை. பின்னனி இசையும், ஆர்த‌ர் வில்சனின் ஒளிப்பதிவும் பலம் சேர்க்கிறது.

இது தனது படம் என்ற முத்திரையில் இருந்து விலகி பார்வையாளனை நிறையவே சோதித்து இருக்கிறார் பாலா.

மீனவர்களுடன் இணைந்து போராட்டம்- சீமான் அறிக்கை:

லங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்காவிட்டால் தமிழக மீனவர்களைத் திரட்டி அவர்களுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை:

இது வரை 550 க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொலை செய்தும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தும் அவர்களைச் சித்திரவதை செய்த சிங்களப் படை சிறிது காலம் தனது வெறியாட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது.

சில நாட்களுக்கு முன் இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததன் பேரில் 16-ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இப்பொழுது மீண்டும் சிங்களக் கடற்படை தனது அட்டூழியத்தையும் வெறித்தனத்தையும் ஆரம்பித்துள்ளது.


ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன் தினம் காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு களில் மீன்பிடிக்கச் சென்ற 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் வலைகளை விரித்து மீன்களை பிடித்து கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த சிங்கள கடற்படை வீரர்கள் நமது மீனவர்களை அச்சுறுத்தியும் மிரட்டியும் மிக கடுமையாக நடந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சிந்தாதுரை, செல்வம், பேரின்பம், அழகேசன், கணேசன், முத்துக்காளை, ராமகிருஷ்ணன், ராம சாமி, உள்பட 23 மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்று,மன்னார் கடற்படை முகாமில் வைத்துள்ளது.

இந்த அட்டுழியத்தை இந்த முறையாவது நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்த நிலை தொடர நாம் அனுமதிக்கக் கூடாது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அடிக்கடி கொலை வெறித் தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அதன்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
         

மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகம், பாம்பன், தங்கச்சிமடம் கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கைளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு தனது சிறப்புத்தூதரை இன்று உடனடியாக கொழும்பு அனுப்பி சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ராமேசுவரத்தில் போராட்டம் நடத்தும் மீனவர் அமைப்புக்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி மிகப் பெரிய போராட்டமாக முன்னெடுக்கும் .
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, June 21, 2011

சாய்பாபா வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது !

சத்யசாய்பாபவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக தயாரிக்க போவதாக சினிமா டைரக்டர் கேடி ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். பிரபல சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் காங்கிரஸ் எம்,பியுமான ஹரிராம ஜோகையா, மற்றும் ஜோனவிதுலா ராமலிங்கேஸ்வரா ராவ் ஆகியோர் புட்டபர்த்தி நகருக்கு வருகை தந்தனர். படம் எடுப்பது குறித்து கோடி ராமகிருஷ்ணா கூறியதாவது: சத்யசாய்பாபாவின் படம் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்படும் என்றும், இந்தியமொழிகளில் பெரும்பான்மை மொழிகளில் தயாரித்து வெளியிடப்படும் என்றும் கூறினார்.

'மாவீரன்'-விமர்சனம்

றுஜென்மம் பற்றிய கதை. தெலுங்கில் வெற்றி பெற்ற 'மஹதீரா' தமிழில் 'மாவீரன்' என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது.

ராம்சரண்தேஜா (சிரஞ்சிவியின் மகன்), காஜல் அகர்வால், பன்ஹரி, சரத்பாபு, தேவ்கில் பிரமானந்தம் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு... செந்தில்குமார், இசை... மரகதமணி, இயக்கம்... ராஜமெளலி, தயாரிப்பு... கீதா ஆர்ட்ஸ்.

கி.பி. 1600 ஆம் ஆண்டில் ராஜவம்சத்தில் பிறந்த இளவரசி காஜல் அகர்வாலுக்கும், போர் படைத்தளபதி ராம்சரண்தேஜாவுக்கும் காதல் மலர்கிறது. இளவரசியின் மாமன் சதி செய்து காதலர்களை சேர விடாமல் செய்கிறார். எனக்கு கிடைக்காத எதுவும் யாருக்கும் கிடைக்க கூடாது என்று அடிக்கடி சொல்லும் மான், தேவ்கில் இளவரசியை கொன்றுவிட, அவனை அழித்து விட்டு உயிரை மாய்த்து கொள்கிறார் தளபதி. 400 ஆண்டுகள் கழித்து மறு ஜென்மம் எடுக்கிறார்கள் மூவரும். மறு ஜென்மத்திலும் அதே காதலர்கள், மாமனே வில்லன். களமும் பின்னணியும் வேறு. தடைகளை உடைத்து மறுஜென்மத்தில் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது மீதிக்கதை.

இக்காலத்து இளைஞனாக பைக் பாய்ச்சல், குத்துப் பாடு என்று இருக்கிற ராம்சரண், காஜலின் கை ஸ்பரிசம் தன் கையில் பட்டதும் காதலைமட்டுமல்ல பூர்வ ஜென்ம கதையையும் உணர்ந்து கொள்ள முன் ஜென்மத்தில் என்ன நடந்தது என்று விரிகிறது கதை.

படத்தின் பலமே முன் ஜென்மக் காட்சிகள் அடங்கிய ப்ளாஷ்பேக் காட்சிகள்தான். என்னவொரு கலைநயம்.. கோட்டைகள், அரண்மனை, போர்க்களம் பின்னணி என எல்லாமே பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. கலை இயக்குநர் எஸ்.ரவிந்தரின் செய் தொழில் சேர்த்தி பளிச்சிடுகிறது.

ராம்சரண்தேஜா துறு துறு இளைஞனாக வசீகரிக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், நடனத்திலும் அட்ராசக்கை என சொல்ல வைக்கிறார். ஆனால் காதல் காட்சியில் கூட ஏனோ முகம் இறுகிப்போயே இருக்கிறது. அரசனுக்காக காதலைத் தியாகம் செய்யும் நல்ல நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது.

உண்மையான ராஜகுமாரி மாதி கொள்ளை அழகாக இருக்கிறார் காஜல் அகர்வால். நடிப்பும் அழகு.

மரகதமணியின் பின்னணி இசை உற்சாகமூட்டுகிறது.
'ஆசை ஆசையாய்' பாடல் இனிமை. கலை இயக்கமும் ஒளிப்பதிவும் இரண்டு தூண்கள் என்று சொல்லலாம். வசனம்... பாக்யராஜ். உதட்டசைவுக்கு ஏற்ப ஒரு தமி படத்திற்கு எழுதியதுபோல உள்ளது. சபாஷ் படத்தின் இன்னொரு ஹீரோ கிராபிக்ஸ்தான். நிஜம் போலவே நம்பகத்தன்மையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே மறுஜென்ம கதைகள் வந்திருந்தாலும் திரைக்கதையிலும் பிரமாண்டத்திலும் மாறுபட்டிருக்கிறது. ஆனால் தொட்ட‌துக்கெல்லாம் பாட்டு என வருவது இன்னமும் ஆந்திர ரசனை மாறவில்லையா என்று கேட்கத் தோன்றுகிறது.

நவீனமும், புராதனமும் இணைந்த வித்தியாசமான கமர்ஷியல் மசாலாவாக மாவீரன் கொடுத்திருக்கிறார், இயக்குநர்.

Friday, June 10, 2011

ஒருமாசம் என்னை அலைய விட்டார் பாலா.

'எல்லாம் அவன் செயல்' ,'அழகர்மலை' படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ஆர் .கே.தற்போது 'புலிவேஷம்','கடமை கண்ணியம் கட்டுப்பாடு 'படங்களில் கதாநாயகனாக நடித்துவரும் அவர்,பாலாவின் 'அவன்-இவன்  'படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.'அவன் இவன் 'படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி அவர் கூறுகையில்; "வில்லன் கேரக்டர் என்று சொல்வதைவிட அது முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்று சொல்லலாம்.மாட்டு இறைச்சியை   வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழில் செய்யும் கேரக்டரில் நடித்துள்ளேன்.விஷால் கூட சண்டைக் காட்சியும் இருக்கிறது.பொதுவா பாலா சார் திருப்தி வரும் வரை எடுப்பார்.ஆனால் நான் நடிச்ச காட்சிகள் எல்லாம் ரெண்டு டேக்கிலேயே ஒ.கே.பண்ணி அவரிடம் பாராட்டு வாங்கியிருக்கேன்.இந்த கேரக்டருக்காக நிறைய உழைத்திருக்கேன்  ஒரு மாசம் கிட்ட மேக்கப்போட்டு நடிக்காமல் இருந்திருக்கேன் தினமும் ஷூட்டிங் ஸ்பாட் வந்துடுவேன்அந்த கேரக்டரை உள் வாங்குவதற்காக  .ஒருமாசம் என்னை ஷூட்டிங்  ஸ்பாட்டிலேயே அலைய விட்டார் பாலா. படம் பார்த்தவங்க    எல்லாரும் அது ஆர்.கே.யா என்று கேட்டாங்க அந்த அளவுக்கு என்னை மாற்றியிருக்கிறார்  பாலா." என்றார்.தொடர்ந்து வில்லனாக வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு "எனக்கு கேரக்டர் முக்கியத்துவமாக தெரிந்தால் தாராளமாக  நடிப்பேன்.வில்லனாக நடித்தால் கண்டிப்பாக கற்பழிப்பு காட்சியில் நடிக்க மாட்டேன்.அதை கொள்கையாகவே வைத்திருக்கேன் "என்றார்.

Friday, June 3, 2011

எழுத்தாளன் என்றுமே சினிமாவில் தோற்கமாட்டான் !-கவிஞர் வைரமுத்து

'னேரி பிக்சர்ஸ்' 'நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ' சேவற்கொடி' .இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. ஏவிஎம் சரவணன் முதல் குறுந்தகடை வெளியிட,' குமுதம் 'நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ஜவகர் பழனியப்பன் பெற்றுகொண்டார். இந்த நிகழ்ச்சியில் வசந்த பவன் ஹோட்டல்களின் உரிமையாளர் ரவி, இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், ஏ.ஆர்.முருகதாஸ், சீமான் , ராதாமோகன் சீனு ராமசாமிஆகியோர் கலந்து கொண்டனர்.
' சேவற்கொடி ' படத்தில் புதுமுகம் அருண்பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக மலையாள நடிகை பாமா நடிக்கிறார். சீமான்,ராதாமோகன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இரா.சுப்பிரமணியன் இயக்குகிறார்
  பி..செல்லத்துரை ஒளிப்பதிவு செய்துள்ளார்.புதிய இசையமைப்பாளர் சி.சத்யா இசையமைத்திருக்கிறார். கவிபேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதி இருக்கிறார்.
விழாவில் இயக்குனர் கே .வி.ஆனந்த் பேசும்போது "முதல்வன்\' படத்தின் 'அழகான ராட்சசியே ' பாடலில் வரும் வரிகளுக்காக நாயகன் நாயகி 'உக்கி' போட முடியாததால் தான் தலைகீழாக நின்று ஒளிப்பதிவு செய்ய வேண்டியிருந்தது "என்றும் அந்த அளவுக்கு தன வரிகள் மூலம் வேலை வாங்குபவர் வைரமுத்து' என்றும் குறிப்பிட்டார்.
"இது புதுமுகங்கள் நடித்ததுமட்டுமல்ல புதிய தொழிநுட்ப கலைஞர்கள் டீமே அறிமுகமாகும் படம்."என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டியதுடன் தான் தயாரிக்கும் படத்திலும் இந்த சத்யா தான் இசையமைப்பாளர் என்றார்."'வைரமுத்து ஓர் அனுபவமிக்க இளைஞர்'என்று ஆரம்பித்த குமுதம்உரிமையாளர் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் ,அமெரிக்காவில் தமிழ் படங்கள் ரசிக்கப்படுவதையும் பாராட்டபடுவதையும் நினவு கூர்ந்தார்.
ஏ.வி எம்.சரவணன் பேசும்போது "இந்த படத்தில் நிறைய புதுமுகங்கள் இருக்கிறார்கள்..புதியவர்கள்தான் தமிழ் சினிமாவை வாழவைத்து கொண்டிருக்கிறார்கள.'பராசக்தி'யில் சிவாஜி கூட புதுமுகம் தான்".என்றார்""'ஆறாவதுமுறை தேசிய விருது பெற்றிருக்கும் வைரமுத்துவை அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்ட வேண்டும் " என்றார்.அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.
புதுமுக இசையமைப்பாளர் சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் மேடையில் நேரடியாக பாடினார்கள். பாடல்கள்களின் வரிகளும், இசையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரையுமே கவர்ந்தது. நிகழ்ச்சியில் பேசிய அத்தனை பேரும் வைரமுத்துவின் பாடல்களின் வரிகளைப் பற்றி பாராட்டி பேச, இயக்குநர் சீனு ராமசாமி, வைரமுத்து புதிய இயக்குநர்களுக்கு எந்த வகையில் ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதையும், அவருடன் பணியாற்றிய தனது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் வைரமுத்து பேசும்போது "ஆறாவது முறை தேசியவிருதுபெற்றிருக்கிறேன்.இது எனக்கானது அல்ல.தமிழுக்கானது.இந்தியாவின் தேசிய மொழிகளில் திரைப்பாடலில் அதிக விருது பெரும் சிறந்த மொழியாக தமிழ் இருக்கிறது.ஆறு விருது பெற்றதில் நான் ஒரு கருவிதான்.என்னை கருவியாக்கி இயக்கியிருப்பவர்கள் பலர்.அப்படி என்னை இயக்குபவர்கள் இருக்கும்வரை ,என்னிடம் உணர்ச்சிஇருக்கும்வரை நான் எழுதிக் கொண்டே இருப்பேன்.என்னிடம் தமிழ் தீராதவரை ஓடிக்கொண்டே இருப்பேன்.புதிய இயக்குனர்களை நான் ஆதரிப்பதாக சீனு ராமசாமி சொன்னார். "புதியவர்களை என்றுமே நான் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ என்று பார்ப்பதில்லை. எந்த விதைக்குள் எந்த விருட்சம் இருக்கிறது என்றுதான் பார்ப்பேன். அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்றான் பாரதி..நெருப்பு பொறிகளில் சிறிய பொறி பெரிய பொறி என்று எதுவுமில்லை.இவர்கள் எல்லாம் சிறு தீப்பொறி என்றாலும் மூங்கில் காட்டியே கொளுத்தி விடும் சக்தி படைத்தவர்கள்.அந்த வகையில் இயக்குநர் சுப்பிரமணியனும் இந்த படத்தின் மூலம் வெற்றி பெறுவார்.'சேவற்கொடி 'இயக்குநர் சுப்பிரமணியன் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். எழுத்தாளன் என்றுமே சினிமாவில் தோற்கமாட்டான். அந்த வகையில் சேவற்கொடியும் வெற்றி பெறும். தமிழ் சினிமா இப்போது புத்துணர்ச்சியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
மேலை நாட்டு திரைப்படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு இங்கு திறமைசாலிகள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு நான் ஒன்று சொல்லிகொள்கிறேன். நீங்கள் புதிய இயக்குநர்களை தேர்ந்தெடுக்கும் போது நன்றாக யோசியுங்கள். அவர்களை தேர்ந்தெடுத்தப் பிறகு யோசிக்காதிர்கள். அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள். அப்போதுதான் சாதித்து காட்டுவார்கள்." என்றார். விழாவுக்கு வந்த அனைவரையும் நிர்வாகத் தயாரிப்பாளர் சாய் ஜெகன் வரவேற்று பேசினார்.இறுதியில் இயக்குனர் இரா.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
 

Thursday, June 2, 2011

விக்ரம் ஜிம் பாயாக நடிக்கும் 'ராஜ பாட்டை '

மலுக்கு பிறகு நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி வருபவர் விக்ரம் விரைவில் வெளிவர இருக்கும் 'தெய்வத்திருமகன்' படத்தில் ஐந்து வயது சிறுவனின் மனநிலையை வெளிப்படுத்தும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.இதை தொடர்ந்தது 'ராஜ பாட்டை' என்ற படத்தில் நடிக்க விருக்கிறார்.'வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை' என்று  மாற்பட்ட  கதைக்களங்களில் பயணிக்கும்  சுசீந்தரன் தான்  விக்ரமை வைத்து 'ராஜ பாட்டை' யை இயக்குகிறார். இபடத்தின் விக்ரம். ஜிம் பாய் கேரக்டரில் நடிக்கிறார்.அவரது ஜோடியாக 'வாண்டட் 'தெலுங்கு படத்தில் நடித்த தீக்சா ஷெத் நடிக்கிறார்.  இவர்களுடன்  தம்பி ராமையா,டைரக்டர்                       கே.விஸ்வநாத், அருள்தாஸ்  ஆகியோரும் நடிக்கின்றனர்.யுவன் சங்கர் ராஜா இசையமைகிறார்..மதி ஒளிப்பதிவு செய்கிறார். சீனுவாசன் கதைக்கு பாஸ்கர்சக்தி வசனம் எழுதுகிறார்.திரைக்கதை,இயக்கம்-சுசீந்திரன்..எஸ்.பி.கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கதை முழுக்க முழுக்க சென்னையில்  நடப்பதால் முழு படபிடிப்பும்  சென்னையிலேயே  நடைபெறுகிறது.பாடல் காட்சி வெளிநாடுகளில் நடைபெறவிருக்கிறது.இதன் தொடக்க விழா ஜூன் 7 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.
         

எத்தன்-திரை விமர்சனம்

டன் மேல் கடன் வாங்கி நிம்மதி இழக்கும் இளைஞனின் கதை.

விமல், சனுஷா, சரோஜித், ஜெயபிரகாஷ், மனோபாலா, எம்.என். பாஸ்கர், மயில்சாமி, சிங்கம்புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு... கே.பி.ஆர். ரமேஷ், இசை-தாஜ்நூர்,இயக்கம்... எல். சுரேஷ், தயாரிப்பு... ஷேரலி பிலிம்ஸ்.

திருமணத்திற்கு முதல்நாள் இரவு மாப்பிள்ளைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு மணப்பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடுகிறார் விமல். அவர் யார் காதலரா ? என்றால் இல்லை.. இப்படி எதிர்பார்ப்போடு படம் ஆரம்பிக்கிறது. இருவரும் சென்னைக்கு பஸ்ஸில் போகின்றனர்.

இரவு உணவுக்காக ஹோட்டலில் பஸ் நிறுத்தப்பட, அங்கே மாப்பிள்ளையின் நண்பன் பார்த்துவிட, அவரிடம் ப்ளாஷ்பேக்கில் நடந்த சம்பவங்களை விமல் சொல்வதாக கதை பயணிக்கிறது.

கடன் வாங்கி வீடு கட்டினால் பின்னாளில் அந்த சுமை மகனுக்கு ஏற்பட்டு விடும் என்று கஷ்டப்பட்டு சொந்தமாக வீடு கட்டி சுயமரியாதையுடன் கடன் வாங்க கூடாது என்று வாழ்ந்து வருபவர் ஆசிரியர் ஜெயப்பிரகாஷ். ஆனால் அவரது மகன்  விமலோ இதற்கு நேர் மாறானவர். கடன் வாங்குவதையே கொள்கையாக கொண்டவர். கடன் வாங்கி தொழில் செய்து நஷ்டப்பட்டு மீண்டும் மீண்டும் கடன் வாங்குகிறார். ஒருகட்டத்தில் கடன் கழுத்தை நெறிக்க உயிர்ப் பயத்தில் ஓடி ஒளிகிறார். வீட்டை அடமானம் வைத்து கடன்களை அடைக்கிறார் விமல் அப்பா. விமல் திருந்தி வெலைக்குப் போகிறார்.

இதற்கிடையில் விமலின் வீட்டுக்கு பூ பறிக்க வரும் ச்னுஷா அங்கே தன் மாமன் கொடுத்த சங்கிலியை தவறவிட்டு விடுகிறார். அதை 'ஆட்டை'யபோட்டு அவளது மாமன் கடையிலேயே அடகு வைக்குகிறார் விமல். சங்கிலி விவகாரம் தெரிந்து விமலை அடித்து உதைக்க, அந்த பணைத்தையும் அவரது அப்பாவே செட்டில் பண்ணுகிறார். பிடிக்காத மாமனுக்கு கழுத்தை நீட்டக் கூடாது என்று தவிக்கிற சனுஷா விமலின் உதவியை நாட அவரை மீட்கிறார் விமல்.. சென்னைக்கு வர அங்கே வில்லன், கோஷ்டியுடன் துரத்த, முடிவு என்ன என்பதே கிளைமாக்ஸ்.

விமலுக்கு படத்தில் எத்தனாக டைட்டில் ரோல். அவரது இயல்பான தோற்றமும் பேச்சும் களவாணியைபோல எத்தனுக்கும் பலமாக அமைந்துள்ளது.

கடன் வாங்குவதில் சாமர்த்தியசாலியான விமல் பின்பு கடன் வசூலிக்கும் வேலையில் சேர்வது கலகலப்பு. கடன் பற்றி பேசினாலே பிடிக்காத அப்பா. பேசினாலே கடன் வாங்கி விடும் மகன் இந்தநல்ல பாத்திர முரண்பாடு சுவையாக உள்ளது.

நாயகி சனுஷா ஆளும் அழகு. நடிப்பும் அழகு. கண்களே வசனம் பேசுகின்றன. மாமனாக வரும் சரோஜித் புதியவர் என்று நம்பமுடியவில்லை. ஆனால் அவருக்கான பின்னனி குரலும் மாடுலேஷனும் தெலுங்கு படம் போன்ற உணர்வை தருகிறது.

மயில்சாமி ஏற்பாடு செய்யும் எம்.எஸ் . பாஸ்கரின் வசிய மந்திரம் செம காமெடி. ஒளிப்பதிவு 'பளிச்'என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியாது. காரணம் 'பளிச்'' படத்தில் பற்றாதுதான். தாஜ்தூரின் இசையில் நா.முத்துக்குமார் எழுதியுள்ள ''மழையுதிர்காலம்' சுகமான மெலோடி. பின்னணி இசையில் இன்னும் அவர் உழைக்க வேண்டும் என்பதற்கு 'எத்தன்'உதாரணம்.

விமல் கடன் வாங்குகிறார். துரத்துகிறார்கள் சமாளிக்கிறார். என காமெடியாக சொல்லிருந்தாலும் அவர் எதற்காக வாங்குகிறார்? என்ன தொழிலில் எப்படி நஷ்டமானார்? என்பதற்கான அழுத்தமான காட்சிகள் இல்லாத்தால் .அவர் மீது சிம்பத்தி வரவில்லை. பக்கத்து வீட்டு பையன் போல இருந்தாலும் நடிகனாகவே பாவிக்க முடிகிறது. மற்றபடி கலகலப்பாக கதை சொல்லி கடன் கொடுமையின் கருத்தும் சொல்லி முடித்துள்ள இயக்குநர் எல். சுரேஷின் திறமையை பாராட்டலாம்.