Friday, June 3, 2011

எழுத்தாளன் என்றுமே சினிமாவில் தோற்கமாட்டான் !-கவிஞர் வைரமுத்து

'னேரி பிக்சர்ஸ்' 'நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ' சேவற்கொடி' .இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. ஏவிஎம் சரவணன் முதல் குறுந்தகடை வெளியிட,' குமுதம் 'நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ஜவகர் பழனியப்பன் பெற்றுகொண்டார். இந்த நிகழ்ச்சியில் வசந்த பவன் ஹோட்டல்களின் உரிமையாளர் ரவி, இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், ஏ.ஆர்.முருகதாஸ், சீமான் , ராதாமோகன் சீனு ராமசாமிஆகியோர் கலந்து கொண்டனர்.
' சேவற்கொடி ' படத்தில் புதுமுகம் அருண்பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக மலையாள நடிகை பாமா நடிக்கிறார். சீமான்,ராதாமோகன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இரா.சுப்பிரமணியன் இயக்குகிறார்
  பி..செல்லத்துரை ஒளிப்பதிவு செய்துள்ளார்.புதிய இசையமைப்பாளர் சி.சத்யா இசையமைத்திருக்கிறார். கவிபேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதி இருக்கிறார்.
விழாவில் இயக்குனர் கே .வி.ஆனந்த் பேசும்போது "முதல்வன்\' படத்தின் 'அழகான ராட்சசியே ' பாடலில் வரும் வரிகளுக்காக நாயகன் நாயகி 'உக்கி' போட முடியாததால் தான் தலைகீழாக நின்று ஒளிப்பதிவு செய்ய வேண்டியிருந்தது "என்றும் அந்த அளவுக்கு தன வரிகள் மூலம் வேலை வாங்குபவர் வைரமுத்து' என்றும் குறிப்பிட்டார்.
"இது புதுமுகங்கள் நடித்ததுமட்டுமல்ல புதிய தொழிநுட்ப கலைஞர்கள் டீமே அறிமுகமாகும் படம்."என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டியதுடன் தான் தயாரிக்கும் படத்திலும் இந்த சத்யா தான் இசையமைப்பாளர் என்றார்."'வைரமுத்து ஓர் அனுபவமிக்க இளைஞர்'என்று ஆரம்பித்த குமுதம்உரிமையாளர் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் ,அமெரிக்காவில் தமிழ் படங்கள் ரசிக்கப்படுவதையும் பாராட்டபடுவதையும் நினவு கூர்ந்தார்.
ஏ.வி எம்.சரவணன் பேசும்போது "இந்த படத்தில் நிறைய புதுமுகங்கள் இருக்கிறார்கள்..புதியவர்கள்தான் தமிழ் சினிமாவை வாழவைத்து கொண்டிருக்கிறார்கள.'பராசக்தி'யில் சிவாஜி கூட புதுமுகம் தான்".என்றார்""'ஆறாவதுமுறை தேசிய விருது பெற்றிருக்கும் வைரமுத்துவை அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்ட வேண்டும் " என்றார்.அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.
புதுமுக இசையமைப்பாளர் சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் மேடையில் நேரடியாக பாடினார்கள். பாடல்கள்களின் வரிகளும், இசையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரையுமே கவர்ந்தது. நிகழ்ச்சியில் பேசிய அத்தனை பேரும் வைரமுத்துவின் பாடல்களின் வரிகளைப் பற்றி பாராட்டி பேச, இயக்குநர் சீனு ராமசாமி, வைரமுத்து புதிய இயக்குநர்களுக்கு எந்த வகையில் ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதையும், அவருடன் பணியாற்றிய தனது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் வைரமுத்து பேசும்போது "ஆறாவது முறை தேசியவிருதுபெற்றிருக்கிறேன்.இது எனக்கானது அல்ல.தமிழுக்கானது.இந்தியாவின் தேசிய மொழிகளில் திரைப்பாடலில் அதிக விருது பெரும் சிறந்த மொழியாக தமிழ் இருக்கிறது.ஆறு விருது பெற்றதில் நான் ஒரு கருவிதான்.என்னை கருவியாக்கி இயக்கியிருப்பவர்கள் பலர்.அப்படி என்னை இயக்குபவர்கள் இருக்கும்வரை ,என்னிடம் உணர்ச்சிஇருக்கும்வரை நான் எழுதிக் கொண்டே இருப்பேன்.என்னிடம் தமிழ் தீராதவரை ஓடிக்கொண்டே இருப்பேன்.புதிய இயக்குனர்களை நான் ஆதரிப்பதாக சீனு ராமசாமி சொன்னார். "புதியவர்களை என்றுமே நான் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ என்று பார்ப்பதில்லை. எந்த விதைக்குள் எந்த விருட்சம் இருக்கிறது என்றுதான் பார்ப்பேன். அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்றான் பாரதி..நெருப்பு பொறிகளில் சிறிய பொறி பெரிய பொறி என்று எதுவுமில்லை.இவர்கள் எல்லாம் சிறு தீப்பொறி என்றாலும் மூங்கில் காட்டியே கொளுத்தி விடும் சக்தி படைத்தவர்கள்.அந்த வகையில் இயக்குநர் சுப்பிரமணியனும் இந்த படத்தின் மூலம் வெற்றி பெறுவார்.'சேவற்கொடி 'இயக்குநர் சுப்பிரமணியன் அடிப்படையில் ஒரு எழுத்தாளர். எழுத்தாளன் என்றுமே சினிமாவில் தோற்கமாட்டான். அந்த வகையில் சேவற்கொடியும் வெற்றி பெறும். தமிழ் சினிமா இப்போது புத்துணர்ச்சியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
மேலை நாட்டு திரைப்படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு இங்கு திறமைசாலிகள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு நான் ஒன்று சொல்லிகொள்கிறேன். நீங்கள் புதிய இயக்குநர்களை தேர்ந்தெடுக்கும் போது நன்றாக யோசியுங்கள். அவர்களை தேர்ந்தெடுத்தப் பிறகு யோசிக்காதிர்கள். அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள். அப்போதுதான் சாதித்து காட்டுவார்கள்." என்றார். விழாவுக்கு வந்த அனைவரையும் நிர்வாகத் தயாரிப்பாளர் சாய் ஜெகன் வரவேற்று பேசினார்.இறுதியில் இயக்குனர் இரா.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment