Thursday, June 2, 2011

எத்தன்-திரை விமர்சனம்

டன் மேல் கடன் வாங்கி நிம்மதி இழக்கும் இளைஞனின் கதை.

விமல், சனுஷா, சரோஜித், ஜெயபிரகாஷ், மனோபாலா, எம்.என். பாஸ்கர், மயில்சாமி, சிங்கம்புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு... கே.பி.ஆர். ரமேஷ், இசை-தாஜ்நூர்,இயக்கம்... எல். சுரேஷ், தயாரிப்பு... ஷேரலி பிலிம்ஸ்.

திருமணத்திற்கு முதல்நாள் இரவு மாப்பிள்ளைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு மணப்பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடுகிறார் விமல். அவர் யார் காதலரா ? என்றால் இல்லை.. இப்படி எதிர்பார்ப்போடு படம் ஆரம்பிக்கிறது. இருவரும் சென்னைக்கு பஸ்ஸில் போகின்றனர்.

இரவு உணவுக்காக ஹோட்டலில் பஸ் நிறுத்தப்பட, அங்கே மாப்பிள்ளையின் நண்பன் பார்த்துவிட, அவரிடம் ப்ளாஷ்பேக்கில் நடந்த சம்பவங்களை விமல் சொல்வதாக கதை பயணிக்கிறது.

கடன் வாங்கி வீடு கட்டினால் பின்னாளில் அந்த சுமை மகனுக்கு ஏற்பட்டு விடும் என்று கஷ்டப்பட்டு சொந்தமாக வீடு கட்டி சுயமரியாதையுடன் கடன் வாங்க கூடாது என்று வாழ்ந்து வருபவர் ஆசிரியர் ஜெயப்பிரகாஷ். ஆனால் அவரது மகன்  விமலோ இதற்கு நேர் மாறானவர். கடன் வாங்குவதையே கொள்கையாக கொண்டவர். கடன் வாங்கி தொழில் செய்து நஷ்டப்பட்டு மீண்டும் மீண்டும் கடன் வாங்குகிறார். ஒருகட்டத்தில் கடன் கழுத்தை நெறிக்க உயிர்ப் பயத்தில் ஓடி ஒளிகிறார். வீட்டை அடமானம் வைத்து கடன்களை அடைக்கிறார் விமல் அப்பா. விமல் திருந்தி வெலைக்குப் போகிறார்.

இதற்கிடையில் விமலின் வீட்டுக்கு பூ பறிக்க வரும் ச்னுஷா அங்கே தன் மாமன் கொடுத்த சங்கிலியை தவறவிட்டு விடுகிறார். அதை 'ஆட்டை'யபோட்டு அவளது மாமன் கடையிலேயே அடகு வைக்குகிறார் விமல். சங்கிலி விவகாரம் தெரிந்து விமலை அடித்து உதைக்க, அந்த பணைத்தையும் அவரது அப்பாவே செட்டில் பண்ணுகிறார். பிடிக்காத மாமனுக்கு கழுத்தை நீட்டக் கூடாது என்று தவிக்கிற சனுஷா விமலின் உதவியை நாட அவரை மீட்கிறார் விமல்.. சென்னைக்கு வர அங்கே வில்லன், கோஷ்டியுடன் துரத்த, முடிவு என்ன என்பதே கிளைமாக்ஸ்.

விமலுக்கு படத்தில் எத்தனாக டைட்டில் ரோல். அவரது இயல்பான தோற்றமும் பேச்சும் களவாணியைபோல எத்தனுக்கும் பலமாக அமைந்துள்ளது.

கடன் வாங்குவதில் சாமர்த்தியசாலியான விமல் பின்பு கடன் வசூலிக்கும் வேலையில் சேர்வது கலகலப்பு. கடன் பற்றி பேசினாலே பிடிக்காத அப்பா. பேசினாலே கடன் வாங்கி விடும் மகன் இந்தநல்ல பாத்திர முரண்பாடு சுவையாக உள்ளது.

நாயகி சனுஷா ஆளும் அழகு. நடிப்பும் அழகு. கண்களே வசனம் பேசுகின்றன. மாமனாக வரும் சரோஜித் புதியவர் என்று நம்பமுடியவில்லை. ஆனால் அவருக்கான பின்னனி குரலும் மாடுலேஷனும் தெலுங்கு படம் போன்ற உணர்வை தருகிறது.

மயில்சாமி ஏற்பாடு செய்யும் எம்.எஸ் . பாஸ்கரின் வசிய மந்திரம் செம காமெடி. ஒளிப்பதிவு 'பளிச்'என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியாது. காரணம் 'பளிச்'' படத்தில் பற்றாதுதான். தாஜ்தூரின் இசையில் நா.முத்துக்குமார் எழுதியுள்ள ''மழையுதிர்காலம்' சுகமான மெலோடி. பின்னணி இசையில் இன்னும் அவர் உழைக்க வேண்டும் என்பதற்கு 'எத்தன்'உதாரணம்.

விமல் கடன் வாங்குகிறார். துரத்துகிறார்கள் சமாளிக்கிறார். என காமெடியாக சொல்லிருந்தாலும் அவர் எதற்காக வாங்குகிறார்? என்ன தொழிலில் எப்படி நஷ்டமானார்? என்பதற்கான அழுத்தமான காட்சிகள் இல்லாத்தால் .அவர் மீது சிம்பத்தி வரவில்லை. பக்கத்து வீட்டு பையன் போல இருந்தாலும் நடிகனாகவே பாவிக்க முடிகிறது. மற்றபடி கலகலப்பாக கதை சொல்லி கடன் கொடுமையின் கருத்தும் சொல்லி முடித்துள்ள இயக்குநர் எல். சுரேஷின் திறமையை பாராட்டலாம்.
 

No comments:

Post a Comment