Tuesday, June 21, 2011

'மாவீரன்'-விமர்சனம்

றுஜென்மம் பற்றிய கதை. தெலுங்கில் வெற்றி பெற்ற 'மஹதீரா' தமிழில் 'மாவீரன்' என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது.

ராம்சரண்தேஜா (சிரஞ்சிவியின் மகன்), காஜல் அகர்வால், பன்ஹரி, சரத்பாபு, தேவ்கில் பிரமானந்தம் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு... செந்தில்குமார், இசை... மரகதமணி, இயக்கம்... ராஜமெளலி, தயாரிப்பு... கீதா ஆர்ட்ஸ்.

கி.பி. 1600 ஆம் ஆண்டில் ராஜவம்சத்தில் பிறந்த இளவரசி காஜல் அகர்வாலுக்கும், போர் படைத்தளபதி ராம்சரண்தேஜாவுக்கும் காதல் மலர்கிறது. இளவரசியின் மாமன் சதி செய்து காதலர்களை சேர விடாமல் செய்கிறார். எனக்கு கிடைக்காத எதுவும் யாருக்கும் கிடைக்க கூடாது என்று அடிக்கடி சொல்லும் மான், தேவ்கில் இளவரசியை கொன்றுவிட, அவனை அழித்து விட்டு உயிரை மாய்த்து கொள்கிறார் தளபதி. 400 ஆண்டுகள் கழித்து மறு ஜென்மம் எடுக்கிறார்கள் மூவரும். மறு ஜென்மத்திலும் அதே காதலர்கள், மாமனே வில்லன். களமும் பின்னணியும் வேறு. தடைகளை உடைத்து மறுஜென்மத்தில் எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பது மீதிக்கதை.

இக்காலத்து இளைஞனாக பைக் பாய்ச்சல், குத்துப் பாடு என்று இருக்கிற ராம்சரண், காஜலின் கை ஸ்பரிசம் தன் கையில் பட்டதும் காதலைமட்டுமல்ல பூர்வ ஜென்ம கதையையும் உணர்ந்து கொள்ள முன் ஜென்மத்தில் என்ன நடந்தது என்று விரிகிறது கதை.

படத்தின் பலமே முன் ஜென்மக் காட்சிகள் அடங்கிய ப்ளாஷ்பேக் காட்சிகள்தான். என்னவொரு கலைநயம்.. கோட்டைகள், அரண்மனை, போர்க்களம் பின்னணி என எல்லாமே பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. கலை இயக்குநர் எஸ்.ரவிந்தரின் செய் தொழில் சேர்த்தி பளிச்சிடுகிறது.

ராம்சரண்தேஜா துறு துறு இளைஞனாக வசீகரிக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், நடனத்திலும் அட்ராசக்கை என சொல்ல வைக்கிறார். ஆனால் காதல் காட்சியில் கூட ஏனோ முகம் இறுகிப்போயே இருக்கிறது. அரசனுக்காக காதலைத் தியாகம் செய்யும் நல்ல நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது.

உண்மையான ராஜகுமாரி மாதி கொள்ளை அழகாக இருக்கிறார் காஜல் அகர்வால். நடிப்பும் அழகு.

மரகதமணியின் பின்னணி இசை உற்சாகமூட்டுகிறது.
'ஆசை ஆசையாய்' பாடல் இனிமை. கலை இயக்கமும் ஒளிப்பதிவும் இரண்டு தூண்கள் என்று சொல்லலாம். வசனம்... பாக்யராஜ். உதட்டசைவுக்கு ஏற்ப ஒரு தமி படத்திற்கு எழுதியதுபோல உள்ளது. சபாஷ் படத்தின் இன்னொரு ஹீரோ கிராபிக்ஸ்தான். நிஜம் போலவே நம்பகத்தன்மையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே மறுஜென்ம கதைகள் வந்திருந்தாலும் திரைக்கதையிலும் பிரமாண்டத்திலும் மாறுபட்டிருக்கிறது. ஆனால் தொட்ட‌துக்கெல்லாம் பாட்டு என வருவது இன்னமும் ஆந்திர ரசனை மாறவில்லையா என்று கேட்கத் தோன்றுகிறது.

நவீனமும், புராதனமும் இணைந்த வித்தியாசமான கமர்ஷியல் மசாலாவாக மாவீரன் கொடுத்திருக்கிறார், இயக்குநர்.

No comments:

Post a Comment