Wednesday, July 20, 2011

யார் நினைச்சாலும் திருட்டு விசிடி யை ஒழிக்கவே முடியாது ! -டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்

'திருட்டு விசிடி யை ஒழிக்கவே முடியாது 'என்று 'ரௌத்திரம்' இசை வெளியீட்டு விழாவில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா-ஸ்ரேயா நடிக்கும்' ரௌத்திரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா  வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்றது.விழாவில் ஆர்.பி.சௌத்ரி,இயக்குனர்கள் எஸ்.ஏ .சந்திரசேகரன்,கே.எஸ்.ரவிக்குமார்,லிங்குசாமி,எஸ்.பி.ஜனநாதன் , விக்ரமன்,ராஜேஷ்,சாய் ரமணி,வெற்றிமாறன்,கோகுல் ,நடிகர்கள் ஆர்யா,ஜெயம் ரவி,ஜீவா,நடிகை ஸ்ரேயா உள்பட பலர் கலந்துகொண்டனர்.பாடல் குறுந்தகடை இயக்குனர்கள் சேர்ந்து வெளியிட நடிகர்கள் சேர்ந்து பெற்றுக்கொண்டனர்..விழாவில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியாதாவது: "ஜீவா நடிச்ச 'கோ' படத்தை ரெண்டு தடவை பார்த்தேன்.ஒரு தடவை தான் தியேட்டர்ல பார்த்தேன்.இன்னொரு தடவை சிடி யில்  தான் பார்த்தேன்.நான் முன்பே சொன்னது தான் ,படம் ரீலிஸ் பண்ணும்போதே படத்தோட ஒரிஜினல் சிடியை வெளியிட்டு விடலாம் அது ஒரு பக்கம் காசு வந்துகொண்டிருக்கும்.இதை ஏன் சொல்றேன்னா திருட்டு சிடி ஈ ,கொசு,ஈசல் மாதிரி தான். யார் நினைச்சாலும் திருட்டு விசிடி யை ஒழிக்கவே முடியாது. இதற்கு எஸ் .ஏ சந்திரசேகரன்  [தயாரிப்பாளர் சங்க தலைவர் ]முயற்சி எடுக்கவேண்டும்" என்றார். அடுத்து பேச வந்த எஸ் .ஏ சந்திரசேகரன்  இதை பற்றி  எதுவும் பேசவில்லை ."விஜய்யின் வளர்ச்சியால் தனக்கு பெருமை ஜீவாவின் வளர்ச்சியால் சௌத்ரிக்கு  பெருமை " என பெருமைகளை சொல்லி வாழ்த்திவிட்டு போனார்.

No comments:

Post a Comment