Monday, April 8, 2013

வில்லன் வேடத்தை மணிவண்ணன் தவிர யாராலும் உருவாக்க முடியாது ! -சத்யராஜ்

"அமைதிப்படை' அமாவாசைக்கு இணையாக ஒரு வில்லனை யாராலும் படைக்க முடியாது. அந்த ஆற்றல் மணிவண்ணனுக்கு மட்டுமே உள்ளது. அதனால்தான் அவர் படத்தில் வில்லனாக நடித்தேன். அதை மிஞ்சும் ஒரு பாத்திரத்தை யாராவது உருவாக்கினால் அந்தப் படத்தில் வில்லனாக நடிக்க நான் தயார்" என்றார் நடிகர் சத்யராஜ்.
   
அமைதிப்படை 2 படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில்,
              


"எனக்கு வில்லனாக நடிப்பதுதான் பிடிக்கும். அப்படி நடித்த காலத்தில் மிகுந்த சந்தோஷமாக இருந்தேன். எந்த பொறுப்பும் கிடையாது.
ஆனால் ஹீரோவான பிறகு இருந்த சந்தோஷமெல்லாம் போயிடுச்சி. 1994-ம் ஆண்டு மணிவண்ணன் என்கிட்ட அமைதிப்படை கதையைச் சொன்னார். வில்லனா இருந்து ஹீரோவாகி நமக்குன்னு ஒரு இடத்தைப் பிடிச்சிக்கிட்டிருந்த  நேரத்துல மீண்டும் வில்லனான்னு மணி கிட்ட கேட்டேன். அவரோ, ஹீரோவும் நீங்கதான், வில்லனும் நீங்கதான்னு சொன்னார். நான் இந்தப் படத்தோட கதை பிடிக்கலைன்னு கூறி தப்பிச்சிடலாம்னு நினைச்சேன்.
  
ஆனால் அவர் சொன்ன கதை அற்புதமாக இருந்தது. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். நடிச்சேன். இருபது ஆண்டுகள் கழித்து இப்போது இந்தப் படத்தோட இரண்டாம் பாகம். மிக அருமையான அரசியல் படமாக வந்திருக்கிறது
அமைதிப்படை
2. அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்றில்லாமல், இன்றைய அரசியலைப் பேசுகிறது படம்.
  
வில்லனா நடிக்கிறது பத்தி கவலைப்படல. ஆனால் அதுக்காக சும்மா ஹீரோகிட்ட அடிவாங்கிட்டு போற மாதிரி சப்பையான வேடங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. இவங்க ஹீரோவாகிறதுக்கு நாம அடிவாங்கணுமா? இந்தப் படத்துலகூட,  'இவங்க ட்ரம்ஸ் வாசிக்க எங்க பம்ஸ்தான் கிடைச்சுதா'-ன்னு ஒரு வசனம் வச்சிருக்காங்க.
  
வில்லனா நடிக்கணும்னா, அந்தப் பாத்திரம் அதிகபட்ச வீச்சோட இருக்கணும். எனக்குத் தெரிஞ்சு, இந்த சினிமாவுல பிரமாதமான வில்லன் வேடம் அமைதிப்படை அமாவாசைதான். அதை முறியடிக்கிற மாதிரி இன்னொரு வில்லன் வேடத்தை     மணிவண்ணன் தவிர யாராலும் உருவாக்க முடியாதுன்னு நான் அடிச்சி சொல்றேன். அப்படி யாராவது உருவாக்கினால், நிச்சயம் நான் அதில் நடிப்பேன்," என்றார்.

No comments:

Post a Comment